ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து இடம்பெற்ற முதல் சந்திப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தனது முதல் சந்திப்பை நடத்தியுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இச்சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இருவரும் மனம்விட்டு பேசியதாக தெரியவருகிறது.
இதன்படி அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தனது முதல் சந்திப்பை நடத்தியுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இச்சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இருவரும் மனம்விட்டு பேசியதாக தெரியவருகிறது.