ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாடு திரும்பும் நாள் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 05ஆம் திகதி அவர் நாடு திரும்ப இருந்தார் என்றும், எனினும் அவரது நாடு திரும்பும் நாள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது எனவும் ஏற்கனவே கூறப்பட்டது.
இருப்பினும் இந்த மாத இறுதியில் தான் அவர் நாடு திரும்புவார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.