இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள் கோரியுள்ளன.
சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் கருத்து தெரிவித்திருந்த அவர், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் “Third Class Journalists - மூன்றாம் வகுப்பு ஊடகவியலாளர்கள்” என குறிப்பிட்திருந்தார்.
இந்நிலையில் கூட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஆறு ஊடக அமைப்புகள், அவரது கருத்துக்கள் தொடர்பாக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.