“2/3 இல்லாமல் முடியாது, 20 இல்லாமல் முடியாது, தற்போது பசில் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாதாம் - அதுவும் இயலாமல் போனால் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் மருமகள்மாருக்கு சரி அமைச்சுப் பதவி கொடுத்துப் பாருங்கள்”!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“2/3 இல்லாமல் முடியாது, 20 இல்லாமல் முடியாது, தற்போது பசில் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாதாம் - அதுவும் இயலாமல் போனால் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் மருமகள்மாருக்கு சரி அமைச்சுப் பதவி கொடுத்துப் பாருங்கள்”!

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று சொல்பவர்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தோல்வியுற்றதாகக் கூறத் தவறிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்தும் நாடு முன்னேற்றமடையாவிட்டால், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மருமகள்களை வரவழைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

திருமதி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவரது மருமகள்மார்களையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து அமைச்சர்களாக நியமணம் செய்து நாட்டை கட்டியெழுப்புமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

முதலில் அவர் 2/3 இல்லாமல் முடியாது என்றனர், பின்னர் 20 இல்லாமல் முடியாது என்று சொன்னார்கள், இப்போது பசில் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று கூறுகின்றனர். இப்ப்வாறே எதிர்காலத்தில் வேறு காரணத்தைக் கொண்டு வரவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.