சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் பயண வரலாறு இருக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயணத்தடை சில நிபந்தனைகளின் அடிப்படையில் தளர்த்தப்பட்டதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நிபந்தனைகளாவன
நிபந்தனைகளாவன
- இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எதிர்மறையான பி.சி.ஆர் சோதனை பெற்றிருக்க வேண்டும். பயணிகளில் விமானத்திற்குள் நுழையும் முன்பு இதனை உறுதிப்படுத்த வேண்டும்
- ஆன்டிஜென் பரிசோதனைகளை புறப்படுவதற்கு முந்தைய சோதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
- பி.சி.ஆர் சோதனை குறித்த நாடுகளிலுள் அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை / ஆய்வகத்திலிருந்து கியூஆர் கோட்/பார் கோட் மூலம் வழங்கப்பட வேண்டும்.
- பயணிகள் முன்வைக்கும் பரிசோதனை முடிவுகளின் நம்பகத்தன்மையை விமான நிறுவனங்கள் தங்களை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இலங்கைக்கு வருகை தருபவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் அல்லது இலங்கை சுற்றுலா பயோ பப்பில் பாதை வழியாக மட்டும வர அனுமதிக்கப்படுகிறார்கள்.