BREAKING: அறபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பல நிபந்தனைகளுடன் நீக்கம் !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: அறபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பல நிபந்தனைகளுடன் நீக்கம் !!!

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் பயண வரலாறு இருக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயணத்தடை சில நிபந்தனைகளின் அடிப்படையில் தளர்த்தப்பட்டதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நிபந்தனைகளாவன
  • இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எதிர்மறையான பி.சி.ஆர் சோதனை பெற்றிருக்க வேண்டும். பயணிகளில் விமானத்திற்குள் நுழையும் முன்பு இதனை உறுதிப்படுத்த வேண்டும் 
  • ஆன்டிஜென் பரிசோதனைகளை புறப்படுவதற்கு முந்தைய சோதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
  • பி.சி.ஆர் சோதனை குறித்த நாடுகளிலுள் அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை / ஆய்வகத்திலிருந்து கியூஆர் கோட்/பார் கோட் மூலம் வழங்கப்பட வேண்டும்.
  • பயணிகள் முன்வைக்கும் பரிசோதனை முடிவுகளின் நம்பகத்தன்மையை விமான நிறுவனங்கள் தங்களை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • இலங்கைக்கு வருகை தருபவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் அல்லது இலங்கை சுற்றுலா பயோ பப்பில் பாதை வழியாக மட்டும வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலதிக அறிவிப்பு வரும் வரை மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.