VIDEO: எச்சரிக்கை 🔴 - நாட்டில் இன்னும் நூறே நாட்களில் பல இலட்ச கொரோனா தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: எச்சரிக்கை 🔴 - நாட்டில் இன்னும் நூறே நாட்களில் பல இலட்ச கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் தற்போது போன்று கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றால் 100 நாட்களில் 10 இலட்சம் தொற்றாளர்கள் உருவாக வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருவருக்கு அதனை பரப்பினால் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் இரட்டிப்பு மடங்கான கொரோனா தொற்றாளர்கள் உருவாகக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர் அதனை மற்றைய நபர்களுக்கு பரப்பாமல் இருப்பதும் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து அதனை பெற்றுக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பதும் அனைவரினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.