VIDEO: ஜூன் இறுதிக்குள் நாட்டில் கொரோனா முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஜூன் இறுதிக்குள் நாட்டில் கொரோனா முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் இது தான்!

ஜூன் இறுதிக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அரச மருந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 29 மில்லியன் டோஸ் தேவைப்படுவதாகவும், தற்போது நாட்டில் 32 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து தடுப்பூசிகளும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு வந்தடையும் எனவும், தடுப்பூசிகளாவன ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜூன் மாதத்தில் சீனாவிலிருந்து 3 மில்லியன் தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து 1 மில்லியன் தடுப்பூசிகளும் இலங்கைக்கு வரவழைக்கப்படும் என்றும், தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது இலகுவாகும் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
 .

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.