மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றுக்குச் சொந்தமான வீதி அபிவிருத்தி அதிகார சபை பெயரிடப்பட்ட வாகனத்தில் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் சாரதி உட்பட நால்வர் இன்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பி.பண்டார தலைமையில் ஒரு பொலிஸ் குழுவினர் இவர்களை கைது செய்தனர்.
-கனகராசா சரவணன்