சுகாதார சட்டத்தை மீறி திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 11 பேருக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார சட்டத்தை மீறி திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 11 பேருக்கு கொரோனா!


நாட்டின் சுகாதார துறையினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை பின்பற்றாமல் நடத்தப்பட்ட திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் மற்றும் மணமகள் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.


இதனையடுத்து புத்தளம் கொஸ்வத்தை மெதகிரிமிட்டியான கிராம சேவகர் பிரிவு இன்று (11) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


மெதகிரிமிட்டியான பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 09 ஆம் திகதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.


அதில் சுகாதார சட்டங்களை மீறி 140 பேர் கலந்துகொண்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதில் கலந்துகொண்டவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


பரிசோதனை முடிவுகளின் படி 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.