இலங்கையில் கொரோனா தொற்றானது தீவிரமடைந்துள்ள நிலையில், தரமான முகக்கவசம் அணிவது தொடர்பாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
N95 முகக்கவசமே பாதுகாப்பு மிக்கது என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சத்திரசிகிச்சை சிகிச்சை முக்கவசங்களும் இதற்கு ஒத்தான பாதுகாப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை முகக்கவசம் அணிவது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகவும், ஆகையால் இரட்டை முகக்கவசம் அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
வெறுமனே துணியிலான முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பு அளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.