🔴 BREAKING: மீண்டும் அமுலுக்கு வரும் நாடளாவிய முழு நேர பயணத்தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

🔴 BREAKING: மீண்டும் அமுலுக்கு வரும் நாடளாவிய முழு நேர பயணத்தடை!

கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டதைப் போன்றே இந்த வார இறுதியிலும் நாடளாவிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்தார்.

இப்பயணத் தடையானது எதிர்வரும் மே 21 ஆம் திகதி இரவு 11 மணிக்கு முதல் மே 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை தொடரும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மே 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் மே 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை இப்பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தினமும் இரவு 11 மணி முதல் காலை 04 மணி வரை இரவு நேர பயணக் கட்டுப்பாடானது, தொடர்ந்து மே 31 வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.