நாட்டில் இன்றைய தினம் (19) மேலும் புதிதாக 36 கொரோனா மரணங்கள் பதிவாகின.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,051 ஆக உயர்ந்துள்ளது.
இதுவே இலங்கையில் இதுவரை நாளொன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்களாகும்.