குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் நாளை (20) முதல் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கீழே படத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.