இரத்த பரிசோதனை செய்த தாதியை பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்த இளைஞன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரத்த பரிசோதனை செய்த தாதியை பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்த இளைஞன் கைது!


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள தனியார் மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தாதியர் ஒருவர் மீது பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த இளைஞன் ஒருவனை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (19) உத்தரவிட்டார்.


குறித்த பிரதேசத்திலுள்ள மருத்துவ ஆய்வுகூட நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் (18) அதிகாலை 6.00 மணிக்கு இரத்த பரிசோதனைக்கு சென்ற 27 வயதுடைய இளைஞன் இரத்தத்தை பரிசோதனைக்காக ஊசிமூலம் எடுத்த பெண் தாதியர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்துள்ளார்.


இதனையடுத்து குறித்த பெண் தாதியர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.


இதில் கைது செய்யப்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.