நாட்டில் இன்றைய தினம் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்றைய தினம் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை!


இலங்கையில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், ஏனைய அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.


இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 3,623 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 151,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,222 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது.


அத்துடன் இவர்களில் 1,051 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.