இலங்கை மக்களின் ஒத்துழைப்பை கோரும் உலக சுகாதார இஸ்தாபனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மக்களின் ஒத்துழைப்பை கோரும் உலக சுகாதார இஸ்தாபனம்!


இலங்கை மக்கள் தற்போதைய கொரோனா பரவல் நிலைமையை தீவிரநிலைமையாக கருதி செயற்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.


இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஒலிவியா நீவெராஸ், காணொளி செய்தி ஒன்றின் மூலம் இதனைக் கூறியுள்ளார்.


இலங்கையில் நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. மூன்றாவது அலை மிக மோசமான பாதிப்புகளைத் தரக்கூடியது.


எனவே இலங்கை வாழ் மக்கள் இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் மாத்திரம் தனித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. இதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.