நாட்டில் இன்றும் 2 ஆயிரத்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள்! 720 மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்றும் 2 ஆயிரத்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள்! 720 மரணங்கள்!


இலங்கையில் இன்று 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதில் 42 பேர் வெளிநாடுகளின் இருந்து நாடு திரும்பியர்வர்கள் எனவும் ஏனைய அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 117,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 720 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.