ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதிகாரர்கள் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களாகும். இதனை பகிரங்கமாக எங்களுக்கு தெரிவிக்க முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை பூரணப்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக சட்டமா அதிபரால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்து தொடர்பாக விளக்கமளிக்கும் கூற்றொன்றை சபையில் தெரிவித்தார்.
இதன்போது அவர், சஹ்ரானை கைதுசெய்யுமாறு அரச புலனாய்வு பிரிவு நல்லாட்சி அரசாங்கத்துக்கு 2018இல் தெரிவித்திருந்தது.
அதனை அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த தாக்குதலின் முழுப் பொறுப்பையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார, சஹ்ரானுக்கு எதிராக பகிரங்க பிடியாணையை நாங்கள் தன் பெற்றுக்கொண்டிருந்தோம்.
அந்த பிடியாணையை இவர்கள்தான் நிறுத்தினார்கள். இந்த தாக்குதலின் சதிகாரர்கள் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களாகும். இதனை பகிரங்கமாக தெரிவிக்கின்றோம் என்றார்.
பாராளுமன்றம் இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை பூரணப்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக சட்டமா அதிபரால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்து தொடர்பாக விளக்கமளிக்கும் கூற்றொன்றை சபையில் தெரிவித்தார்.
இதன்போது அவர், சஹ்ரானை கைதுசெய்யுமாறு அரச புலனாய்வு பிரிவு நல்லாட்சி அரசாங்கத்துக்கு 2018இல் தெரிவித்திருந்தது.
அதனை அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த தாக்குதலின் முழுப் பொறுப்பையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார, சஹ்ரானுக்கு எதிராக பகிரங்க பிடியாணையை நாங்கள் தன் பெற்றுக்கொண்டிருந்தோம்.
அந்த பிடியாணையை இவர்கள்தான் நிறுத்தினார்கள். இந்த தாக்குதலின் சதிகாரர்கள் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களாகும். இதனை பகிரங்கமாக தெரிவிக்கின்றோம் என்றார்.