ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் பெயரிடப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று (19) ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக, கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில், எந்தவொரு ஆசனத்தையும் ஐக்கிய தேசிய கட்சி வென்றிராத போதும், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்கப்பட்டது.
எனினும், அதற்கான உறுப்பினர் யார் என்று இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
-ஹிரு நியூஸ்