பதில் சொலிஸிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தினை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய, பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரத்தினத்தினை சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவைக்கு ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் தீர்மானத்துடன் இசைந்து செல்ல முடிவு செய்துள்ளது.
அவர், இலங்கை சோசலிச குடியரசாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையின் சட்டமா அதிபராக பதவி ஏற்கவுள்ள 3ஆவது தமிழரும், 4ஆவது சிறுபான்மையினருமாவார்.