கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தால், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை 14 மாவட்டங்களில் 06 பொலிஸ் பிரிவுகளில் 98 கிராம சேவைப் பிரிவுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.