PHOTOS: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்த 25 வயதுடைய ஹலிமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்த 25 வயதுடைய ஹலிமா!


மாலி நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஸ்கேன் மூலம் அடையாளம் காணப்பட்டதை விடவும் அதிகமாக இரண்டு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.


கடந்த மாதம் மார்ச் 30 ஆம் திகதி ஹலிமா எனும் மேற்படி பெண், சிறந்த மருத்துவ மேற்பார்வை மற்றும் பாதுகாப்பான பிரசவத்துக்காக மாலி அரசினால் மொரோக்கோ நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், இவர் 09 குழந்தைகளையும் நேற்று செவ்வாய்கிழமை (04)  மொரோக்கோவில் பெற்றெடுத்துள்ளார்.


சிசேரியன் மூலம் பிறந்த மேற்படி குழந்தைகளில் ஐவர் பெண்கள், நால்வர் ஆண்களாவர். குழந்தைகள் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாக மாலி சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.


ஹலிமாவின் இந்த பிரசவம் மாலியில் ஒரு பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது, அவர் ஏழு குழந்தைகளையே கர்ப்பம் தரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


மாலி தலைநகர் பமாகோ வில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் தங்கிய பின்னர், மார்ச் 30 அன்று ஹலிமாவை மொராக்கோவுக்கு அனுப்ப வைத்தியர்கள் முடிவு செய்திருந்தனர்.


மொராக்கோ வைத்தியசாலையில் ஐந்து வாரங்கள் தங்கிய பின்னர் நேற்று அவர் 09 குழந்தைகளைப் பிரசவித்தார். தாயும் குழந்தைகளும் சில வாரங்களில் வீடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.