கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!


கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மாலபே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.


86 வயதுடைய நபர் ஒருவர், 96 வயதுடைய அவரது மனைவி மற்றும் 82 வயதுடைய அவரின் இளைய சகோதரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குறித்த மூவரும் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 03ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.


சடலங்கள் தொடர்பான இறுதிக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


மேலும் குறித்த தம்பதியின் மகள், அவரின் கணவர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.