கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மாலபே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
86 வயதுடைய நபர் ஒருவர், 96 வயதுடைய அவரது மனைவி மற்றும் 82 வயதுடைய அவரின் இளைய சகோதரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குறித்த மூவரும் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 03ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் தொடர்பான இறுதிக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த தம்பதியின் மகள், அவரின் கணவர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.