இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் தேசிய அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் தேசிய அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைப்பு!


இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரொனா நிலைமைக்கு மத்தியில் வீரர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாத தெரிய வந்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.