இலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் தமது பயணிகளின் எண்ணிக்கையை 75 ஆக மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரொனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.