கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், மாத்தளை ரிவர்ஸ்டன் பகுதியில் உள்ள சுற்று பங்களா ஒன்றிற்கு வார விடுமுறைக்கு வந்த அமைச்சர் ஒருவரின் மகள், அட்டைப்பூச்சி கடிக்குள்ளாகி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல இணைய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் மகள் மற்றும் அவரது நண்பர்கள் குழுவே இவ்வாறு விடுமுறைக்காக சென்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த அமைச்சரின் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரின் மகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.