கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேலியை சீர் செய்வதற்காக சென்ற சிறுவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையால் சத்திர சிகிச்சை கூடத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் 119 எனும் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டும் பொலிசார் விசாரணை மெற்கொள்ள தவறியுள்ளதாகவும், நேற்று காலை 11.00 மணியளவிலேயே அரம்ப விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்கது.