நேற்றைய தினம் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் ஒரே நாளில் இறுதியாக 31 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 923 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், 27 ஆயிரத்து 54 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இறுதியாக இலங்கையில் அவிசாவளை, நுவரெலியா, ஹொரணை, திருகோணமலை, நெலும்தெனிய, நாவுத்துடுவ, மத்துகம, பாணந்துறை, அம்பலாங்கொடை, நாகொட, மொரட்டுவை, வக்வெல்ல, கட்டுகஸ்தோட்ட, ஹிக்கடுவ, ஜின்தோட்டை, கொழும்ப -5, வெலிகம்பொல, கலென்பிந்துனுவெவ, பொல்கஸ்ஓவிட்ட, ஜா - எல, பொரலஸ்கமுவ, கந்தானை, பேராதனை, பருத்தித்துறை, பொரலந்த, வத்தளை, களனி ஆகிய பிரதேசங்களில் கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.