கொரோனா தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்தார்.
இதையடுத்து, கொரோனா தொற்றினால் மரணித்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது.
திஸ்ஸமஹாராம - யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (15) உயிரிழந்தார்.
அத்துடன், அவரின் கருவில் இருந்த 08 மாத சிசுவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.