இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலிற்கான இலங்கை தூதகரம் அறிவுறுத்தியுள்ளது.
காஸா பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பெருமளவு மக்கள் காணப்படும் பகுதிகளை தவிர்க்க வேண்டும் என தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளவேண்டும் எனவும் தூதுரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையர்கள் தங்கள் பிரயாண ஆவணங்களை எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தூதரகம் மிகவும் அவசரமான சூழ்நிலைகளில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.