இலங்கையில் தற்போது மக்களை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா அடுத்தவாரமளவில் மேலும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால் இலங்கை சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தாதியர் சங்கம் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த நிலைக்கு மத்தியில் இலங்கையிலுள்ள செல்வந்தர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்திருப்பதாக அந்த சங்கத்தின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
விமான நிலையத்திலுள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை தாதியர் சங்கம் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த நிலைக்கு மத்தியில் இலங்கையிலுள்ள செல்வந்தர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்திருப்பதாக அந்த சங்கத்தின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
விமான நிலையத்திலுள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.