அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டிருப்பதைத் தொடந்து கட்சியினுல் பதவிகளில் வெட்டுக்கள் ஒட்டுக்கள் காய் நகர்தல்கள் என பனிப்போர் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கட்சியின் சில முக்கிய பதவிகளுக்கு சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் மொட்டின் வனத்தில் செல்லப் பிள்ளைகளாக சால்வைகளில் ஊஞ்சலாடியவர்கள்.
இதனிடையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அரசின் பக்கமே பாரளுமன்றத்தில் அமர்ந்து அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து அரசின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தும் இன்னொரு திசை நோக்கி பயணிப்பதை வியுக்த்தின் அளவுகவுகளினால் அவதானிக்க முடிகின்றது.
மேலும் தலைமையின் விடுதலைக்காக குரல் கொடுத்து செயல்பட வேண்டிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள், தலைவர் கைது செய்யப்பட்டும் ஒரு உறைகூட நிகழ்தாமல் இருப்பதும் தலைவரின் விடுதலைக்கா நடந்த எந்தவித ஆர்பாட்டங்களிலும் கட்சியின் முக்கிய தொன்டர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதும் யானை வருமுன் ஒளிக்கும் மணியோசை ஒழித்துவிட்டதா என்ற சந்தேகத்தை மோலும் அதிகரிக்கின்றது.
இதனடிப்டையில் அரசுக்கு சவாலாக இருக்கும் துறைமுக நகர சட்டங்களை அனுமதிப்பதற்கான வாக்கெடுப்புகள், அரசு சந்திப்பதற்காக எதிர் நோக்கியுள்ள சவால்களை சமாளிக்க, அமைச்சுக்கள் பதவிகள் என வரும்போது, கட்சியின் பயணம் பாதைமாறி திசைமாறுமா?
பணம் பத்தைத்தான் செய்யும் பதவி பலதையும் செய்யும்!
-பேருவலை ஹில்மி