
கடந்த ஆண்டு 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பிறகு ஒரே நாளில் கைது செய்யப்பட்டவர்களில் இதுவே அதிகம் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்,
மாத்தளையில் 180 பேரும், நிகவரட்டியவில் 79 பேரும், கொழும்பில் 72 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பயண தடையை மீறியதற்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
2020 ஒக்டோபர் முதல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியமைக்காக மொத்தமாக 15,590 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்டவர்களில், சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர், மற்றையவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நபர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.