மொரட்டுவை மேயர் கைது - தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் அடாவடி செயல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொரட்டுவை மேயர் கைது - தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் அடாவடி செயல்!

மொரட்டுவையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மொரட்டுவை மேயரின் தலையீட்டினால் குழப்பநிலையில் முடிவடைந்த காரணத்தினால் மொரட்டுவை மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடுப்பூசியை பெறுவதற்காக வந்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – தடுப்பூசியை பெறுவதற்கான டோக்கனை பெற்றுக்கொண்டவர்களை விடதடுப்பூசிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு வந்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தடுப்பூசிகள் அதிகமாகயிருந்தாலும் பரவாயில்லை டோக்கனை பெற்றவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசியை வழங்கவேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.

மேயர் சுகாதார அதிகாரிகளை தகாதவார்த்தைகளால் ஏசுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

அவர்கள் தடுப்பூசி வழங்குவதற்கான நடைமுறைகளை மீறுகின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை அதிகாலை நான்கு மணிமுதல் தாங்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் மேயரின் தலையீட்டால் தடுப்பூசி தங்களிற்கு கிடைக்கவில்லை என பலர் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.