
தடுப்பூசியை பெறுவதற்காக வந்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – தடுப்பூசியை பெறுவதற்கான டோக்கனை பெற்றுக்கொண்டவர்களை விடதடுப்பூசிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு வந்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தடுப்பூசிகள் அதிகமாகயிருந்தாலும் பரவாயில்லை டோக்கனை பெற்றவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசியை வழங்கவேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.
மேயர் சுகாதார அதிகாரிகளை தகாதவார்த்தைகளால் ஏசுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.
அவர்கள் தடுப்பூசி வழங்குவதற்கான நடைமுறைகளை மீறுகின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை அதிகாலை நான்கு மணிமுதல் தாங்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் மேயரின் தலையீட்டால் தடுப்பூசி தங்களிற்கு கிடைக்கவில்லை என பலர் தெரிவித்துள்ளனர்.