நீண்ட நாட்களுக்கு பின்னர் கண் கலங்கிய பிரதமர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீண்ட நாட்களுக்கு பின்னர் கண் கலங்கிய பிரதமர்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நாட்களின் பின்னர் கண் கலங்கிய சம்பவம் இன்று (26) இடம்பெற்றிருக்கிறது.


வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று காலை அலரிமாளிகையில் விசேட நிகழ்வு நடந்தது.


இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


சமய அனுஷ்டானங்களின் பின்னர், அங்கு தர்ம போதனையை செய்த கொலன்னாவே சிறி சுமங்கல தேரர், கடந்த போர்க்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், படுகொலைகள் இடம்பெற்றபோது நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு ஆறுதல் கூறியமை, போரை நிறுத்துவதற்காக சபதத்தை ஏற்றமை போன்ற விடயங்களை நினைவுப்படுத்தினார்.


அவற்றை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கண்களில் இருந்து கண்ணீர்துளி வந்த காட்சிகளும் பதிவாகியிருக்கின்றன.


இதேவேளை, இதற்கு முன்னர் இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரான ரோஹித ராஜபக்ஷவை சி.எஸ்.என் விவகார வழக்கில் கைது செய்து விளக்கமறியல் உத்தரவுப்பெற்று சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றியபோது அவர் கண் கலங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


-TN


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.