இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த தகவலை இன்று வெளியிட்டார்.
சீனாவிலிருந்து இன்று (26) அதிகாலை சுமார் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தடைந்தன.
இவற்றை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் உள்நாட்டு நிறுவனமொன்று இந்த சிநோவெக் சீனத்தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை கோரியதாகவும் அவர் கூறினார்.
பெரும்பாலும் அடுத்துவரும் இரண்டு மாதங்களில் சீனத்தடுப்பூசி கண்டி – பல்லேகலையில் உள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.