Updated at 02:20pm: “மக்களே தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள்” - இராணுவ தளபதி முழு நாட்டு மக்களுக்கும் அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Updated at 02:20pm: “மக்களே தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள்” - இராணுவ தளபதி முழு நாட்டு மக்களுக்கும் அறிவிப்பு!!


அடுத்த சில நாட்களுக்கு தமது வீடுகளில் அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் பானங்கள் சேமித்து வைக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் தேதி முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். 

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது எவரும் வீதிகளில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு நீண்ட நாள் பயணக் கட்டுப்பாடானது கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறைக்கு உதவும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

Updated at 02:20pm
சில மணி நேரம் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் தினத்தில் (25) மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.