எதிர்வரும் 21 ஆம் தேதி முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது எவரும் வீதிகளில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு நீண்ட நாள் பயணக் கட்டுப்பாடானது கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறைக்கு உதவும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Updated at 02:20pm
சில மணி நேரம் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் தினத்தில் (25) மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.