ஆப்பிள் தொலைப்பேசி மற்றும் கணினிகளை பெற்றுத்தருவதாக கூறி 11 மில்லியன் ரூபா பண மோசடி!!! இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆப்பிள் தொலைப்பேசி மற்றும் கணினிகளை பெற்றுத்தருவதாக கூறி 11 மில்லியன் ரூபா பண மோசடி!!! இருவர் கைது!

இணையத்தளத்தினூடாக ஆப்பிள் கையடக்க தொலைப்பேசி (iPhone) மற்றும் கணினிகளை (iPad) விற்பனை செய்வதாகக் கூறி 11 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முகத்துவாரம் மற்றும் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த இரு சந்தேக நபர்களும் , கொள்ளுப்பிட்டி , காலி வீதி இலக்கம் 662 என்ற முகவரியில் 'இன்ஸ்ட பை' என்ற நிறுவனத்தினை நடாத்தி வந்துள்ளதோடு, இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இணையவழியூடாக (Online Payment) பணத்தை செலுத்தி 15 நாட்களுக்குள் குறித்த அப்பிள் ரக தொலைபேசி மற்றும் நவீன கணினி (iPad) என்பவற்றை கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவித்த இரு சந்தேக நபர்களே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு இணையவழியூடாகவும் , நேரடியாகவும் இவர்கள் பலரிடம் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. 

அத்தோடு அப்பிள் நிறுவனத்துடனோ அல்லது அதன் பிரதிநிதிகளுடனோ இவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் வெளியாகியுள்ளது.

பலரிடமிருந்து இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் , அதற்குரிய பொருட்கள் இவர்களால் உரிய நபர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த மோசடி தொடர்பில் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கமைய 11 மில்லியன் ரூபா இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 70 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் , சிறையிலடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களால் நடத்திச் செல்லப்பட்ட 'இன்ஸ்டா பை' என்ற இணைய தளத்தினூடாக தொலைபேசி அல்லது நவீன கணணியை கொள்வனவு செய்வதற்கு பணத்தை செலுத்தியவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும். கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.