கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் அஸ்டிராஸெனக தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்கள் இரண்டாவது டோஸ் இனை பெற்றுக்கொள்ள ரூ. 5,000 செலுத்த வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இரண்டாவது டோஸ் இனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பதிவுக்கட்டணமாக ரூ. 5,000 செலுத்துமாறு நிறுவனம் ஒன்று அறிவுறுத்தியதாக அரச மருத்துவ சங்கத்திற்கு புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டாக்டர் பெனால் பர்ணாண்டோ தெரிவித்தார்.
தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற ஏராளமான இலங்கையர்கள் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் காத்திருக்கும்போது, தடுப்பூசியினை இவ்வாறு பணத்திற்கு விற்பனை செய்வது நாட்டில் தற்போதைய கடுமையான பிரச்சினை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை நாட்டிற்கு தருவிக்க எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று எவ்வாறு பணம் பெற முயற்சிக்க முடியும் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். (யாழ் நியூஸ்)
இரண்டாவது டோஸ் இனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பதிவுக்கட்டணமாக ரூ. 5,000 செலுத்துமாறு நிறுவனம் ஒன்று அறிவுறுத்தியதாக அரச மருத்துவ சங்கத்திற்கு புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டாக்டர் பெனால் பர்ணாண்டோ தெரிவித்தார்.
தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற ஏராளமான இலங்கையர்கள் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் காத்திருக்கும்போது, தடுப்பூசியினை இவ்வாறு பணத்திற்கு விற்பனை செய்வது நாட்டில் தற்போதைய கடுமையான பிரச்சினை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை நாட்டிற்கு தருவிக்க எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று எவ்வாறு பணம் பெற முயற்சிக்க முடியும் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். (யாழ் நியூஸ்)