சற்றுமுன் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்!


இலங்கையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேபோல், 3 மாவட்டங்களை சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய,

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின், திவுலபிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு.

காலி மாவட்டத்தின், அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரந்துங்கொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொவியபான கிராம உத்தியோகத்தர் பிரிவு, கஹவன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவு, தொம்மங்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு.

ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுனுமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவு, பொனவிஸ்டா கிராம உத்தியோகத்தர் பிரிவு, கட்டுகுருந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு.

இரத்தினபுரி மாவட்டத்தின், பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, தெனகவக்க பாதகட கிராம உத்தியோகத்தர் பிரிவு, திப்பிடிகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உட்பட்ட தெல்கமுவ பிரிவின் நகரப் பகுதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.


தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்.

கொழும்பு மாவட்டம்

பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.