பேலியகொட சிறப்பு குற்றப்பிரிவின் தடுப்புக்காவலில் இருந்த, சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இன்று அதிகாலை மீரிகமவில் சில ஆயுதங்களை மீட்டெடுக்க தாரகவை அழைத்து சென்ற போது பொலிஸாரைத் தாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் இரவு ஒரு பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொஸ்கொட தாரகவின் சட்டத்தரணி, தாரகவின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.