அண்மையில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலை தொடர்ந்து மாலத்தீவு நாட்டில் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மொஹமட் நஷீத்தின் குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அவர் முகம்கொடுத்த தாக்குதலில் இடம்பெற்ற காயங்களையும் அவை சுகம் பெற்று வருவதையும் காட்டுகிறது.
அவர் ஜெர்மனி நாட்டின் பெர்லினில் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)