இலங்கையில் இன்று (16) இதுவரையில் 2,275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் 63 பேர் எனவும், ஏனைய அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.