அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (10) வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் பணிக்கு அழைக்காமலிருப்பதற்கான வழிமுறைகள் இணைக்கப்படும்.
அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், சபைகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவையை மாத்திரம் சீரான முறையில் முன்னெடுக்க குறைந்த பட்ச ஊழியர்களை பணிக்கமர்த்த விதிமுறைகள் இணைக்கப்படும்.