விவசாயத்துறை அல்லாத வேறு தொழிற்துறையினருக்கு தேவையான இரசாயன திரவியங்களை எதிர்வரும் 06ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக தற்போது அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபன தலைவர் கங்கானி லியனகே எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைவாக விவசாயத்துறை சார்ந்த இரசாயன பசளை உள்ளிட்ட இரசாயன திரவியங்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.