நாட்டில் மேலுமொரு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணியொருவர் பிரசவத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயதான கர்ப்பிணியொருவர் பிரசவத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
எனினும் குழந்தையை காப்பாற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போதைய கொரோனா அலை காரணமாக கர்ப்பிணியொருவர் உயிரிழந்த மூன்றாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.