அரசினால் அறிவிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீறி இவ்வார இறுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மகளை அட்டை கடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த அமைச்சரின் மகள் ஒரு குடும்ப பயணத்தில் மாத்தளை பகுதியில் அமைந்துள்ள ஓர் பங்களாவுக்கே இவ்வாறு சென்றிருந்தனர். அதன்போது அவரை அட்டை கடித்ததில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் நேற்று (14) முதல் திங்கள் வரை பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்நிலையில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை மீறியே இவர்கள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த அமைச்சரும் குடும்ப பயணத்துடன் இணைந்தாரா என்பது குறித்து இதுவரை தகவல் வெளிப்படவில்லை, ஆனால் அவரது மகளை அவரது VIP பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)