தற்போது அமுலில் இருக்கும் சுகாதார வழிகாட்டல்கள் மாற்றப்படாதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போது அமுலில் இருக்கும் சுகாதார வழிகாட்டல்கள் மாற்றப்படாதா?


நாளாந்தம் கொரோனா தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்ட பின்னரே தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மாற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயாகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அவதானம் மிக்க நிலைமை காரணமாக, சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டது.


கடந்த 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்காக இந்த வழிகாட்டல் வெளியாக்கப்பட்டது.


பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ இந்த வழிகாட்டல் மாற்றமடைய முடியும்.


எவ்வாறிருப்பினும், பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த வழிகாட்டல் எவ்வாறாக மாற்றமடையும் என்பது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.