இதன் போது மேல் மாகாணத்திற்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய 578 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 1512 பயணிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதாக 275 பேரை பொலிஸார் எச்சரித்தும் உள்ளனர்.
மேலும், மேல் மாகாணத்தினுள் இயங்கிய பொது போக்குவரத்து சேவைகளையும் பொலிஸார் பரிசோதித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 611 பேருந்துகள், 17 ரயில்கள், 564 கார்கள், 1421 முச்சக்கர வண்டிகள் மற்றும் மற்றஒய 775 வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக மொத்தமாக 92 பேர் கைது செய்யப்பட்டதுடன், 4702 நபர்கள் சட்டங்கள் புறக்கணித்ததற்காக பொலிசார் எச்சரித்துமுள்ளனர்.
மேலும், பொது போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை இன்றும் தொடரும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாணத்தில் பொது இடங்களில் இயங்கும் நடமாடும் விற்பனையாளர்களை பரிசோதனை செய்ய பொலிஸார் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையையும் நடத்தினர்.
120 நடமாடும் விற்பனையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று கண்காணிக்க நேற்று பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)