மன்னாரில் சட்டவிரோதமாக மாடு வெட்டி இறைச்சியை விற்க முயன்றவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மன்னாரில் சட்டவிரோதமாக மாடு வெட்டி இறைச்சியை விற்க முயன்றவர் கைது!


மன்னார்  பொது சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் உள்ள உயிலங்குளம் பகுதியில் இன்று (02) காலை அனுமதியின்றி வீட்டில் வைத்து மாடு வெட்டி இறைச்சிக்கடையில் வைத்து விற்பனை செய்ய முயன்ற நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த இறைச்சி மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தெவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயிலங்குளம் பகுதியில் மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டு இறைச்சியை சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.


பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர், மற்றும் உயிலங்குளம் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் இணைந்து மேற்படி சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாட்டு இறைச்சியை மீட்டுள்ளனர்.


பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதி இன்றியும் மாடு வெட்ட வேண்டிய உரிய இடத்தில் வெட்டாமலும் வீடு ஒன்றில் வைத்து சட்ட விரோதமான முறையில் வெட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த  மாட்டு இறைச்சியினை பொது சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.


மேலும் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற ஒருவர் பொது சுகாதார பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.


இதன்போது குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.


மீட்கப்பட்ட மாட்டு இறைச்சி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.